Friday, December 29, 2006

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது! (பாடல் 23)


கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது - உன் திருவுருவத்தை அன்றி வேறு உலக விதயங்களை என் மனத்தில் கொள்ளேன்

அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் - உன் அன்பர்கள் கூட்டத்தை விலகமாட்டேன் (விலக்கமாட்டேன்)

பரசமயம் விரும்பேன் - உன்னைத் துதிப்பதன்றி உலக விதயங்களைத் துதிக்கும் பர சமயங்களை விரும்ப மாட்டேன்.

வியன் மூவுலகுக்கு உள்ளே - மூன்று உலகங்களுக்கும் உள்ளே நின்று அனைத்தையும் இயக்குபவளே

அனைத்தினுக்கும் புறம்பே - இவற்றையும் தாண்டி இந்த பிரபஞ்சம் எல்லாம் தாண்டியும் இருப்பவளே

(அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவளே)

உள்ளத்தே விளைந்த கள்ளே - உள்ளத்தில் விளைந்த அமுதமே

களிக்கும் களியே - எல்லாவிதமான இன்பததையும் அனுபவிக்கும் ஆனந்தவடிவானவளே

அளிய என் கண்மணியே - எளியேன் மேல் கருணை கொண்ட என் கண்மணி போன்றவளே

4 comments:

said...

//கள்ளே களிக்கும் களியே//

கள் பொதுவாக அடுத்தவரைத் தான் மயக்கும்! தானே மயங்குமோ?
ஆனால் அம்பிகையின் நாமம் கேட்ட மாத்திரத்தில், கள்ளே அவள் பெயரில் மயங்குகிறது! - இப்படிக் கள்ளே களிக்கும் களிப்பே!

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மனச் சஞ்சலம் உண்டாகாதிருக்கும்'.

said...

நல்ல விளக்கம் இரவிசங்கர். :-)

said...

நன்றி சிவமுருகன்.