![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY4ofKAVC6qdBymwdXu-5cwSF-0HnrcAvUWYOVlq4EZonENLZKeLBw4qnmXUUsJsbWXArKDOk6VSLurOBIsvw6sHx67SAV29Q2CUPx7-OZuQr5kcrWntSpQ0TX0lA0_A-JpG9q/s400/250px-Vaishnavi_elio.jpg)
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா? - திங்களை முடி மேல் சூடிய இறைவனின் நறுமணம் வீசும் சிறந்த திருவடிகள் எங்கள் தலைமேல் வைக்க எங்களுக்கு இந்த தவம் எப்படி எய்தியது?
எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? - எண்ணிக்கையில் அளவில்லாத விண்ணில் வாழும் விண்ணவர்கள் தங்களுக்கும் இந்த தவம் கிடைக்குமா?
தரங்கக் கடலுள் - அலைவீசும் கடலில்
வெங்கட் பணி அணை மேல் - வெம்மையான கண்களையுடைய பாம்பு படுக்கையின் மேல்
துயில் கூரும் விழுப்பொருளே - துயில் கொள்ளும் பரம்பொருளே! (விஷ்ணு ரூபிணியான வைஷ்ணவியே) !
(பெருமாளும் அன்னையின் உருவம் என்று பட்டர் இந்தப் பாடலில் சொல்கிறார்)
படத்தில் இருக்கும் அன்னை சங்கு, சக்கரம், கதை ஏந்தி கருடனின் மேல் அமர்ந்திருக்கும் வைஷ்ணவி தேவி.